Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா பேருந்துகள் மீது கருப்பு மை!…. நீடிக்கும் எல்லை பிரச்சனை…. பரபரப்பு….!!!!

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அண்மையில் கர்நாடக -மராட்டிய எல்லை பிரச்சினை பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசினார். இதையடுத்து மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் பெலகாவி மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச இருப்பதாக அறிவித்தனர். இதற்கு கர்நாடக அரசானது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. அத்துடன் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்குள் நுழையவும் தடைவித்தது. இதன் காரணமாக சென்ற சில நாட்களாக இரு மாநிலங்கள் இடையில் எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் பெலகாவியில் மராட்டிய மாநில வாகனங்களின் மீது கர்நாடக அமைப்பை சேர்ந்தவர்கள் கல் வீசி தாக்கினர். அதுமட்டுமின்றி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து புனேயில் உத்தவ்தாக்கரே சிவசேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, சுவார்கேட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடக அரசு பேருந்துகளில் கருப்பு மையை பூசினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்தனர். இச்சம்பவத்தால் புனேயில் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |