Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கர்நாடகாவிற்கு கடத்தப்பட்ட மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஜீவகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 14 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேரம்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவி கர்நாடக மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கர்நாடகாவிற்கு சென்று மாணவியை மீட்டனர். அதன்பிறகு ஜீவகன் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |