Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில், மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்….. ஜே.பி.நட்டா பேட்டி….!!!

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், நேற்று முன்தினம் பாரதிய ஜனதா சார்பில் விஜயநகர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வருகை தந்திருந்தார். அப்போது அவர் பேசியதாவது: “5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 4 மாநிலங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பாரதி ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நாட்டிலுள்ள ஒரு தேசிய கட்சி பாரதிய ஜனதா மட்டுமே. நாடு தான் முதலில், கட்சி 2-வது தான் என்று பாரதிய ஜனதா இருக்கின்றது. மற்ற கட்சிகள் பிராந்தியவாதம், மொழி, ஜாதி போன்றவற்றை பேசி மக்களை பிரித்து பார்க்கின்றனர். ஆனால் பாரதிய ஜனதா மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சி செய்கிறது. இது சகோதர – சகோதரி கட்சியாகும். கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். ராமநவமி ஊர்வலத்தின் போது நடந்த வன்முறைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.

Categories

Tech |