Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா…? போக்குவரத்து துறை மந்திரி பேட்டி…!!!!!

கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீ ராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகத்தில் ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு 15 இல் இருந்து 17 சதவிகிதமாகவும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 3 ல் இருந்து 7 சதவிகிதமாகவும் அதிகரிக்க அரசு ஏற்கனவே முடிவு செய்திருக்கிறது. இதற்கான அவசர கூட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து ஒன்பதாவது அட்டவணையில் இட ஒதுக்கீடு அதிகரிப்பை சேர்க்க முடிவு செய்து இருக்கின்றோம். இதற்கான பணிகளும் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் பிற மாநிலங்கள் இட ஒதுக்கீடு அமலில் இருப்பது பற்றி நாங்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். கர்நாடகத்தில் 9 லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடிய பேருந்துகள் நிறுத்தப்படும் அதனால் புதிதாக 4000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் இது பற்றி முதல் மந்திரியிடம் எடுத்து கூறியுள்ளோம் இதற்கு அவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம். மேலும் கனிமவள நிதியை கொண்டு  கர்நாடகப் பகுதிக்கு புதிதாக 600 பேருந்துகளை வாங்க முடிவு செய்திருக்கின்றோம்.

இதற்கு வருகிற 2030 ஆம் வருடத்திற்குள் படிப்படியாக டீசல் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகள் இயக்கப்படும் புதிதாக 2,000 பேருந்து டிரைவர்களை நியமிக்க முடிவு செய்து இருக்கின்றோம். அவர்கள் அனைவரும் வெளி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது இருப்பினும் ஊழியர்களுக்கு காலம் தவறாமல் சம்பளம் வழங்கி வருகின்றோம். போக்குவரத்து கழகங்களின் மேம்பாட்டிற்கு அரசு 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது கர்நாடகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை. அதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதால் மக்களுக்கு சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |