Categories
தேசிய செய்திகள் வானிலை

கர்நாடகத்தில் நீடிக்கும் மழை …..!!

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் குடகு, பெலகாவி, குல்பர்கா, ஹூப்ளி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. குடியிருப்புகள் கோயிகளில் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தலகாவேரி கோயில் பூசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போய்விட்டனர். அவர்களை பற்றி தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. குடகு மாவட்டத்தில் தரை பாலத்திற்கு மேலே தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வயல் வெளிகளில் தேங்கியுள்ள நீர் வெளியேறாததால் பயிர்கள் நீரில் அழுகும் அவலம்  ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குல்பர்கா மாவட்டத்தில் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |