கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர்த்து உரிமையல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. திடீரென ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே குடும்பத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. கருணை அடிப்படையில் வேலைவழங்க பரிசீலிக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த திருவாங்கூர் உரங்கள், வேதிப் பொருள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. எப்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் 1995 ஏப்ரலில் பணியின் போது இறந்தார். ஊழியரின் மனைவி வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததால் கருணையின் படி வேலைதரப்படவில்லை. எப்சிஎல் நிறுவன ஊழியர் இறந்து 24 வருடங்களுக்கு பிறகு கருணை அடிப்படையில் வேலை கோருவதை ஏற்கமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.