ஆன்லைன் மூலமாக கரண்ட் பில் எப்படி கட்ட வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கோடை காலம் தொடங்கிவிட்டது. இனி மின்சார கட்டணம் அதிகரித்துவிடும். மாத சம்பளத்தில் பெரிய தொகையை மின் கட்டணம் செலுத்துவதற்கு ஒதுக்க வேண்டும். அதுவும் மின் கட்டணத்தை நேரடியாக ஈபி அலுவலகத்திற்கு சென்று கட்டுவது பெரிய சிரமம். அங்கே வரிசையில் காத்திருக்கும் மக்களை பார்த்தாலே நமக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடும். அதுவும் கடைசி நாள் நெருங்கி விட்டால் கரண்ட் பில் கட்டுவதற்கு ஆபிசுக்கு லீவு போட்டு நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்காக ஆன்லைன் மூலமாக கரண்ட் பில் கட்டலாம்.
ஆன்லைன் சேவை மையங்களில் கரண்ட் பில் கட்டும் வசதி உள்ளது. ஆனால் அதற்கு நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக உங்களது ஸ்மார்ட் போனில் நீங்கள் கரண்ட் பில் கட்டலாம். கூகுள் பேயில் இந்த வசதி உள்ளது. இப்போது நிறைய பேர் இந்த ஆப் மூலமாக கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலமாக கரண்ட் பில் கட்டுவதற்கு கூகுள் பே ஓபன் செய்து New Payment’ ஆப்சனை தேர்ந்தெடுத்து ‘Bill Payments’என்பதை கிளிக் செய்து அதில் ‘Electricity’ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது உங்களது இபி கணக்கு கூகுள் பே-யில் இணைக்கப்படும்.
அதில் உள்ளே சென்றாலே உங்களுடைய தற்போதைய கரண்ட் பில் எவ்வளவு என்று காட்டிவிடும். அதிலேயே ஆன்லைன் மூலமாக நீங்கள் பணம் செலுத்திவிடலாம். இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் உங்களுடைய கரண்ட் பில் மற்றும் அதற்கான கால வரம்பு பொது தகவல்கள் உங்களுக்கு நோட்டிபிகேஷனாக வரும். இதன் மூலம் உங்களுடைய அன்றாட வேலைகளில் கரண்ட் பில் கட்டுவது மறந்தாலும் ஞாபகப்படுத்த முடியும்.