இந்திய விமானப்படைக்கு சொந்தமான கப்பல் புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து 30 டன் எடை கொண்ட 18 ஆக்சிஜன் டேங்குகள் 3,650 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 39 வெண்டிலேட்டர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஜல்லோசா கப்பல் முலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தடைந்து.அங்கிருந்து ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும் மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.