தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 24 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஜூனியர் பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த மாணவிகள் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இந்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயா, உடற்கல்வி ஆசிரியை கல்பனா மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.