Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு….. படகு சேவை நிறுத்தம்….. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…..!!!!

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதே சமயம் இந்திய பெருங்கடல் மற்றும் அரவிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றம் கொந்தளித்தபடி இருந்தது.

இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக காலை முதல் படகுத்துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Categories

Tech |