Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கனியாமூர் கலவர வழக்கு”…. மேலும் ஐந்து பேர் கைது…!!!!!

கனியாமூர் கலவர வழக்கில் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியவர் உள்பட மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றார்கள்.

இந்நிலையில் வீடியோ ஆதாரத்தின் மூலம் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது வாட்ஸ் அப் குழுவில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு காரணமாக இருந்ததோடு கலவரத்தில் பங்கேற்ற சிவக்குமார், சத்யராஜ், சுந்தர், முத்தையா மற்றும் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சர்புதீன் உள்ளிட்ட ஐந்து பேரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

Categories

Tech |