Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கனமழை எதிரொலி…. மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று ( பிப்.12 ) பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

நேற்று வானிலை ஆய்வு மையம் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும், தென் தமிழக மாவட்டங்கள், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( பிப்.12 ) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று (12.02.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |