Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு இன்று (12ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர், சேலம், கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், தருமபுரி, திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பத்தூர் ஆகிய 25 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12.11.2022) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |