Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |