Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், வேலூர், திருச்சி, விழுப்புரம்,  அரியலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர், கன்னியாகுமரி, சேலம், கரூர் ஆகிய 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12.11.2022) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |