Categories
உலக செய்திகள்

கனடாவில் உயிரிழந்த கணவன்….. “அவர் எங்களுக்கு மீண்டும் வேண்டும்”…… உருக்கமாக பேசிய மனைவி….!!!!

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில்  Bakir Junaideen (57) என்பவர் வசித்துவருகிறார். இவர் இலங்கையிலிருந்து  கனடாவிற்கு குடியேறியிருக்கிறார். சமீபத்தில் பொழுதுபோக்கு பூங்காவில் Junaideenம் அவரது இளைய மகனான Zaid (9)ம் தங்கள் நண்பர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணித்தார். அப்போது படகு கவிழ்ந்து தண்ணீரில் விழுந்த மகனை காப்பாற்றும் முயற்சியில் Junaideen உயிரிழந்தார். அந்த இடத்தில் இருந்தவர்கள் Zaid-ஐ காப்பாற்றியுள்ளனர். தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட Junaideen மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவர் மனைவி Farzana கூறியது, அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார், எனக்கானவராக இருந்தார். எனது கணவரைத் திருப்பிக் கொடுங்கள் ஏனென்றால் என் பிள்ளைகளுக்கு அவர் தேவை என சம்பவத்திற்கு பிறகு கடவுளிடம் வேண்டி கொண்டேன். Junaideen உயிருக்கு போராடும் போது நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு வந்து அவரைப் பார்த்தார்கள். அவர் நேர்மையானவராகவும், மென்மையாக பேசுபவராகவும் திகழ்ந்தார். மேலும் அவர் இறந்த விதத்தில் மட்டும் ஒரு ஹீரோ அல்ல, அவர் வாழ்ந்த விதத்திலும் ஹீரோ தான் என்று  உருக்கத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |