கரூர் மாவட்டத்திலுள்ள பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி இரண்டாவது நாளை முன்னிட்டு சுவாமிக்கு சந்தனம், மஞ்சள், தயிர், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
Categories
கந்த சஷ்டி 2-வது நாள்…. முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!
