Categories
மாநில செய்திகள்

கந்த சஷ்டி விழாவில் பக்தர்களுக்கு…. இந்த வருடம் இதற்கு அனுமதியில்லை….. முக்கிய அறிவிப்பு ….!!!!

வரும் 25ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் கந்தசஷ்டி திருவிழாவை இந்த வருடம் வெகு சிறப்பாக நடத்துவது குறித்தும் பாதுகாப்பாக நடத்துவது குறித்தும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைவர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாப்பான, சுத்தமான, சுகாதாரமான குடிநீர், போக்குவரத்து குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டது.

மேலும் கந்த சஷ்டி விழாவின் போது கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் தங்கி இருந்து விரதம் இருக்க இந்த வருடம் அனுமதி இல்லை என்றும், வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |