போத்தனூர் தபால் நிலையம் எனும் திரைப்படம் சென்ற மேமாதக் கடைசியில் ஓடிடி தளத்தில் வெளியாகியது. பிரவீண் இந்த படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக அஞ்சலிராவ் நடித்து இருந்தார். இந்த படத்திற்காக இயக்கம் மட்டுமின்றி பல வேலைகளையும் பார்த்ததாக பிரவீண் சென்ற சில நாட்களாகவே பல பதிவுகளை சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு பதிவில் படத்தின் கதாநாயகியின் ஆடைகளை அவரே துவைத்ததாக பதிவிட்டு இருக்கிறார்.
அதாவது அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களின் ஆடைகள் தன்னால் மட்டுமே துவைக்கப்பட்டது. வாஷிங்மெஷின் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் எங்களிடம் ஒரேஒரு செட் மட்டுமே இருந்தது. அதனை சில ஆண்டுகளாக மெயின் டைன் செய்தாக வேண்டும். இவ்வாறு நான் கதாநாயகியின் ஆடையைத் துவைத்தபோது என் உதவிஇயக்குனர் இந்த புகைப்படத்தை எடுத்து எனது மனைவிக்கு அனுப்பிவிட்டார். அடுத்து என்ன நடந்து இருக்கும் என்பதை யூகியுங்கள்” எனப் பிரவீண் பதிவிட்டுள்ளார்.