Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கதறி அழுத சிறுமி” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

சிறுமிக்கு  பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பிரேம்குமாரை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |