Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை யில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |