கண்மாய்க்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட நபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதூர் கண்மாய்க்கு அருகில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் எழுவன்கோட்டையை சேர்ந்த பெயிண்டர் குமார் என்பது தெரியவந்துள்ளது .இதையடுத்து குமார் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.