Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கதறி அழுத மனைவி..!!

தேனியில் அரசு பேருந்து மோதி ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள போடி துரைராஜபுரத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று பாண்டி தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் தேனியிலிருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பாண்டியின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் விபத்தில் கணவன், மனைவி இருவரும் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தனர். விபத்தில் பாண்டி பேருந்து சக்கரத்தில் சிக்கினார். அவருடைய தலை பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடைய மனைவி லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். கண்முன்னே கணவர் இறந்து கிடப்பதை பார்த்த செல்வி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் பாண்டியின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அரசு பேருந்து டிரைவர் பாண்டிசெல்வம் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |