விஜய் டிவி பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதன் மூலம் மக்களை அதிக அளவில் ஈர்த்தும் வருகிறது. அதில் பலரால் விரும்பிப் பார்க்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.முன்னதாக, இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரோஷினிக்கு பல ரசிகர்கள் இருந்தனர். அதில் அவருடைய எதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் ரோஷினி சில காரணங்களால் பாரதிகண்ணம்மா சீரியல் விட்டு விலகுவதாக அறிவித்தார்.
மேலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததால்தான் சீரியலை தொடர முடியவில்லை என்றும் காரணம் சொல்லப்பட்டது. அதேபோன்று தற்போது மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்ற ஜெய்பீம் மற்றும் சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கு முதலில் ரோஷினியை தான் அணுகியுள்ளனர். ஆனால் பட வாய்ப்புகளை ரோஷினி புறக்கணித்துள்ளார். இதையடுத்து ரோஷினி சீரியலில் இருந்து விலகுவது ஏற்றுக்கொண்ட விஜய் டிவி நிர்வாகம் அவருக்கு பதில் பல நடிகைகளை அம்மாவாக நடிக்க அணுகியுள்ளது. அதில் முதலில் அணுகியது தற்போது கண்ணம்மாவாக நடிக்கும் வினுசா தேவியை தான்.
அதற்கு முக்கிய காரணம் அவர் ரோஷினியை போன்ற உருவ ஒற்றுமையுடன் இருப்பது தான். ஆனால் வினுஷாதேவி முதலில் இந்த வாய்ப்பை மறுத்துள்ளார். அதன் பின்னர், படக்குழுவினர் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் ரேஷ்மா நட்சத்திரா போன்றோரை அணுகியுள்ளது. ஆனால் அவர்கள் வேறு சீரியலில் கமிட்டாகி இது ஒரு காரணமாக இருந்தாலும் கூட 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க விரும்பாமல் தான் அவர்கள் இந்த வாய்ப்பை புறக்கணித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவுக்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளது. ஆனால் அவரும் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் படக்குழு மீண்டும் வினுசா தேவியை சமாதானம் செய்து கண்ணம்மாவாக நடிக்க வைத்துள்ளனர். மிகப் பிரபலமாக இருந்த கண்ணம்மா கேரக்டரை இவ்வளவு நடிகைகள் மறுத்துள்ளனர் என்பதை பாரதிகண்ணம்மா ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.