தமிழகத்தில் இந்திரா காந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாதம்தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை, பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவச புடவை மற்றும் மாதம் இரண்டு கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் இணைவதற்கு ரேஷன், ஆதார் அட்டையின் நகல், கணவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வயது சான்று ஆகியவற்றை வழங்க வேண்டும். 40 வயதை கடந்த பெண்களுக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.