Categories
தேசிய செய்திகள்

கணவன் மாமியார் சண்டையா…? உதவி மையத்தை நாடுங்கள்… அமைச்சர் கீதாஜீவன் கருத்து…!!!!!!

ராமநாதபுரம்  மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றுள்ளார். மேலும் அரசின் மையங்களில் ஆய்வும் மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு இல்லம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மகளிர் சேவை மையம், பாரதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்ல புதிய கட்டிடம் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அப்போது ராமநாதபுரம் மாவட்ட கழகப் பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், நகர் மன்ற தலைவர் கார்மேகம் போன்றார் உடன் இருந்திருக்கின்றனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் முதல்வரின் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அவை  போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களை மீட்டெடுப்பது பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை அதில் அடங்கும். மேலும் கல்வித்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை போன்றவை இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து இடங்களிலும் விழிப்புடன் நிகழ்ச்சிகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.

பெண்களின் உதவி சேவை எண் 181 என்பதை அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் கொண்டு சென்றிருக்கின்றோம். இந்த திட்டத்திற்கு முதல்வர் அவர்களே  தனிக்கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் பேசும்போது கணவன் மனைவி மற்றும் மாமியார் சண்டைகள் எங்கும் கோபித்துக் கொண்டு பெண்கள் செல்ல வேண்டாம். உங்களுக்கென்று மகளை சேவை மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டிற்கு சென்று அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து உதவி மையத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |