Categories
தேசிய செய்திகள்

“கணவனை 7வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவி…!!” மகனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியது அம்பலம்…!!

மும்பையைச் சேர்ந்தவர் சாந்தனு கிருஷ்ணா. இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் 3 பேரும் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கீதா, தன்னுடைய கணவர் சாந்தனு கிருஷ்ணா குடும்ப தகராறு காரணமாக ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாந்தனு கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி அவருடைய மனைவி கீதாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது கீதா முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக மனைவி கீதா மற்றும் மகன் ராகுல் இருவரும் சேர்ந்து அவருடைய கணவர் சாந்தனு கிருஷ்ணாவை ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |