Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் மீது மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பெட்ரோல் பங்கில் ரவி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சின்னாறு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்த பாலத்தின் மீது பலமாக மோதியது. இதனால் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |