Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. ஒருவர் உயிரிழப்பு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முல்லை நகரில் வசித்து வரும் தமிழழகன் என்பவர் லாரியில் தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.வாழப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த லாரியில் முத்து, பெரியசாமி, துரைசாமி. பூபதி என ஏழு பேர் இருந்துள்ளனர்.இந்நிலையில் அம்மன்பாளையம் சமத்துவபுரம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் காயம் அடைந்த 8 பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக பூபதி என்பவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Categories

Tech |