Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி… சாலையில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் பரிதாப பலி… 4 பேர் படுகாயம்..!!

காரையூர் அருகே லாரி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காரையூர் அருகே இருக்கின்ற அம்பலக்காரன்பட்டி என்ற பகுதியில் சின்னையா என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டு கட்டுமான பணிக்காக பெருமாநாட்டிலிருந்து லாரி மூலமாக ஹாலோ பிளாக் கல் ஏற்றி வரப்பட்டுள்ளது. அப்போது இடையன் பாறை என்னும் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வம்(24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த சின்னையா (62)  அவரின் மனைவி வளர்மதி (51), ராஜா(21), ஓட்டுனர் சபரி(33) ஆகியோர்  படுகாயமடைந்த நிலையில், பொன்னமராவதி பாப்பாயி என்ற அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரையூர் காவல்துறையினர் இறந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |