Categories
மாநில செய்திகள்

கட்டணம் வசூலித்தால் உடனே அங்கீகாரம் ரத்து…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

பொறியியல் கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5%இட ஒதுக்கீட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை யில் அரசின் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதனால் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகும் ஒரு சில கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களிடம் கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி வருவதாக புகார்கள் வந்துள்ளது. அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்களுக்கான கல்வி செலவை அரசு ஏற்றுள்ளது என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

அரசின் உத்தரவை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், ஏஐசிடிஇ வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே கட்டணம் வசூல் செய்து இருந்தால் அதை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |