Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடையை பூட்டி சென்ற உரிமையாளர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள கோசாகுளம் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மளிகை கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து செந்தில்வேல் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |