வெறிநாய்கள் கடித்ததால் 13 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் விவசாயி தவசுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தவசுமணி தோட்டத்தில் இருக்கும் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வெறிநாய்கள் கடித்ததால் 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு தவமணி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.