மளிகை கடையின் பூட்டை உடைத்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள அடுத்தகுடி கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் சிலர் மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், செல்போன், 5,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர்.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த முருகேசன் உடனடியாக திருவாடானை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து முருகேசனின் கடையில் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.