தெரு நாய்கள் கடித்ததால் புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை அணைப்பகுதிக்கு தண்ணீரைத் தேடி புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அந்த புள்ளிமானை தெரு நாய்கள் கடித்து குதறியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காயமடைந்த பள்ளி மானுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரத்தில் புள்ளி மான் இறந்துவிட்டது. இதனையடுத்து வனத்துறையினர் புள்ளிமானின் உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.