Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் கீர்த்தி சுரேஷ் என்ன செய்துகொண்டிருக்கிறார்?… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ரங்தே படப்பிடிப்பு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும் இவர் தெலுங்கில் நடிகர் நிதினுடன் இணைந்து நடித்த ரங் தே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரங் தே படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்துக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.

Categories

Tech |