முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜு மீது இருந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கடம்பூர் ராஜு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை ஏற்று கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது கடம்பூர் ராஜு கோவிட்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.