நாட்டில் பொது மக்களுக்கு கடன் வழங்கி வரும் அரசு,தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஏஜெண்டுகளை நியமனம் செய்து அதன் மூலமாக கடனை வசூல் செய்து வருகின்றன. ஆனால் அந்த ஏஜெண்டுகள் சிலர் கடன் வாங்கி அவர்களை தவறாக பேசுவதும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வருவதும் நடந்து வருகின்றது. அதனால் கடன் வாங்கியவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதையடுத்து ஏஜெண்டுகள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், ஏஜெண்டுகள் மீதான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வரும்போது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மீது நேரடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நாங்கள் அறிவோம். இனிவரும் நாட்களில் ஏஜெண்டுகள் மோசமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்