பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஆறு வருட காலங்களில் அதிக அளவு சொத்துக்கள் சேர்த்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவி காலம் முடிவடைய இருக்கின்ற நிலையில் அடமேஜிங் அறிக்கை இந்த தகவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அஹ்மத் நூரானி இதுகுறித்து கூறியதாவது, கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் புதிய தொழிலை தொடங்கி இருக்கின்றனர்.
மேலும் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி அதிக அளவில் பணம் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பஜ்வாவின் மனைவி ஆயிஷா அம்ஜத் அவரது மருமகள் மஹ்னூர் சபி மற்றும் பிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரின் நிதியும் அதிகரித்து இருக்கிறது. இரண்டு குடும்பத்தினரும் கடந்த ஆறு வருடங்களில் கோடீஸ்வரர்களாகி சர்வதேச வணிகத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும் பல வெளிநாட்டு சொத்துக்களை வாங்க தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தங்களின் மூலதனத்தை வெளிநாடுகளுக்கு மாற்ற தொடங்கியுள்ளனர். இஸ்லாமபாத் மற்றும் கராச்சியில் உள்ள பண்ணை வீடுகள், லாகூரில் உள்ள பெரிய ரியல் எஸ்டேட் போர்ட்போலியா போன்ற இடங்களில் வாங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் வணிகங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.12,700 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக அடமேஜின் அறிக்கை தெரிவித்துள்ளது.