கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தா.ர் அதில் தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை ஓபிஎஸ் ஒருநாள்கூட பார்வையிட்டது இல்லை. தற்போது போராட்டம் நடத்துகிறார்களா? கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்ததில்லை.
80 வயதாகும் நான் தற்போது நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளேன். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என அவர் தெரிவித்தார். 30 ஆண்டு சராசரி கணக்குப்படி நவம்பர் 30-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரைத் தேக்கலாம் என்று அவர் கூறினார்.