Categories
தேசிய செய்திகள்

கடந்தாண்டை போலவே கொரோனாவை வீழ்த்தி…. நம்மால் வெல்ல முடியும் – பிரதமர் மோடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு பல்வேறு அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் இந்த கூட்டம் மிக முக்கியமாக கருதப்பட்டது.

மேலும் கொரோனா பரவல்,  தடுப்பூசி பயன்பாடு ஆகியவை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டு கொரோனாவை இந்தியா வீழ்த்தியது. இம்முறையும் அதே வழிமுறைகளை வேகமாக ஒருங்கிணைப்புடன் கையாண்டு மீண்டும் நம்மால் வெல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |