Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தலுக்கு துணைபோன விற்பனையாளர்…. அதிகாரிகள் திடீர் ஆய்வு…. அதிரடி பணியிடை நீக்கம்….!!

ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போன விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் சிலர் ரேஷன் சிறியை கடத்துவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தலைமையில் அதிகாரிகள் ரேஷன் கடையை திடீர் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது கடையின் பொருட்கள் இருப்பு விவரங்கள் முரணாக இருந்துள்ளது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் ரேஷன் கடை விற்பனையாளர் இதற்கு துணை போனதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விற்பனையாளர் அமராவதியை பணியிடை நீக்கம் செய்த இணைப்பதிவாளர் ரேஷன் கடையை முழுமையாக தணிக்கை செய்ய உத்தாவிட்டுள்ளர்.

Categories

Tech |