நடிகர் கமலஹாசன் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் ஓவியர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதனால் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது “நாங்கள் இருவரும் படைப்புத் துறையில் இருக்கிறோம். இருவரின் நலன்களும் மிகவும் முக்கியம். மகிழ்ச்சியாக வாழ்கிறோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை” என்று கூறினார்.