குட்டையில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறபடுத்த வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோக்கூர் நகர் மற்றும் கதிர்வேல் இடையே இருக்கும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஆண்டு கன மழை பெய்துள்ளது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அங்கு குளம் போல் தேங்கிய தண்ணீர் வடியாமல் அங்கேயே நிற்கின்றது. மேலும் அந்த தண்ணீரில் ஏராளமான மீன்களும் வளர்ந்தன.
இந்நிலையில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் மாசடைந்து காணப்படும் இந்த குட்டையில் வளர்ந்த ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குட்டைகளில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறபடுத்தி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.