Categories
அரசியல்

“ஓட்டு போட வந்த முதியவர்…” யார் என தெரிந்த பின்னர் ஏற்பட்ட பரபரப்பு….!!

தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் விருதுநகர் 15வது வார்டு பகுதியில் உள்ள வாக்குபதிவு மையமான சுப்பையா நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் தம்பி வாக்குப்பதிவு மையத்திற்கு தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்திருந்தார்.

அவருக்கு வயது 95 ஆகும். தள்ளாடிய நிலையில் மிகவும் சிரமப்பட்டு தனது வாக்கை செலுத்த வந்தவர் அன்பழகனின் தம்பி என்பது பலருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் இது குறித்து அறிந்த பிறகு திமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும் அவர் வந்த வேகத்தில் தனது வாக்கினை செலுத்தி விட்டு வேகமாக வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

Categories

Tech |