மத்திய இலங்கை கொழும்பில் பேருந்து ஒன்று செங்குத்தாக கவிழ்ந்த விபத்து உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இலங்கை கொழும்பிலிருந்து புறப்பட்ட பேருந்து பசார நகர் அருகே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் கவிழ்ந்து விழுந்து கடும் விபத்துக்குள்ளானதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இச்சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது ஓட்டுநரின் அலட்சியமே இந்த கோர விபத்துக்கு காரணம் என்றும் இதில் ஓட்டுநர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும் விபத்துகுள்ளான பேருந்தில் சுமார் 70 பயணிகள் பயணம் செய்ததாக உள்ளூர் ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.