தண்டவாளத்தில் டிக் டாக் செய்த கல்லூரி மாணவர் ரயில் மோதி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஞ்சி பேட்டை சேர்ந்த அக்ஷய் என்பவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காஞ்சி பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனப்படும் புதிய ஆப்பில் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர். அப்போது காஜி பேட்டையிலிருந்து பாலாஜா சென்ற பயணிகள் ரயில் வேகமாக வந்தது.
https://twitter.com/VishalDharm1/status/1566470675706945541
தண்டவாளம் அருகே அக்ஷய் நடந்து வரும்போது பின்புறம் ரயில் வருவது போல் செல்போனில் படம் பிடித்தனர். ரயில் தண்டவாளத்தின் அருகில் சென்ற அக்ஷய் மீது திடீரென்று இரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.