Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

” ஓகே ” சொன்ன கலெக்டர்…. ஆப்புவைத்த போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் காவல்நிலையத்தில் சதயா, மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு பதிவாகி இருந்தது. இந்நிலையில்  இவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை பலமுறை எச்சரித்துள்ளனர். அனால் அவர்கள் மூன்று பேரும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் குற்றங்களை செய்து வந்துள்ளனர்.

இதனால் அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். எனவே போலீஸ் சூப்பிரண்டு பத்திரிநாத் மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் மதுரைவீரன், சதயா, ஐயப்பன் ஆகிய 3 பேரும் செய்த குற்றங்கள் குறித்த அறிக்கையை காண்பித்து அவர்களை கைது செய்ய அனுமதி தருமாறு கூறியுள்ளார். இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் 3 பேரையும் கைது செய்ய அனுமதி வழங்கியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மதுரை வீரன், சதயா, ஐயப்பன் ஆகிய மூன்று பேரையும்  குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |