பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. அதில் மிக முக்கியமானது மாத வருமான திட்டம். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒருமுறை மட்டும் பணத்தை முதலீடு செய்தால் போதுமானது. இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தில் 5 வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நிலையான ஒரு தொகை பென்ஷன் போல வந்து கொண்டே இருக்கும். ஐந்து வருடங்கள் முடிந்த பின்னர் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு கூட இந்த கணக்கை நீங்கள் நீட்டித்துக் கொள்ள முடியும்.
இதில் திருமணமானவர்கள் கணவன் மற்றும் மனைவி இணைந்து கூட்டு கணக்காக திறந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. இதில் அதிகபட்சமாக 4.5 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்ய முடியும். ஒருவேளை கூட்டு கணக்காக இருந்தால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 6.6 சதவீதம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்.
இதற்கு ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம்,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 போன்ற ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும். இதில் விண்ணப்ப படிவம் ஆன்லைன் மூலமாகவே உங்களுக்கு கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து அருகில் உள்ள தபால் நிலையத்தில் நீங்கள் கொடுக்க வேண்டும். எந்தவித ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வதற்கு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும். இதில் அரசின் பாதுகாப்பும் அதிகம் உள்ளது.