Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில்… தங்கம் வென்ற மாணவிக்கு… உற்சாக வரவேற்பு…!!!

தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெர்லின் அனிகா. இந்த மாணவி அவ்வை மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த மாணவியால் வாய் பேச முடியாது. காதும் கேட்காது. இவர் மதுரை வில்லாபுரத்தில் இருக்கின்ற கவுன்சிலர் போஸ் முத்தையாவின் போஸ் மெமரிக் பேட்மிட்டன் கிளப்பில் முதலில் பயிற்சி பெற்றுள்ளார். அதன்பின் பயிற்சியாளர் ஒலிவா சரவணன் கிளப்பில் பயிற்சி பெற்று தனது தகுதியை வளர்த்துள்ளார்.

அதன்பின் பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் இந்த மாணவி பெருமை சேர்த்துள்ளார். இந்தப் பதக்கத்தை வெல்வதற்கு உதவியாக இருந்த பயிற்சியாளர், ஊக்கப்படுத்திய கலெக்டர் , மாநகராட்சி ஆணையாளர் களுக்கும் மாணவியின் குடும்பத்தினர் நன்றியை கூறியுள்ளார்கள். தங்கம் வென்ற மாணவி நேற்று மதுரை வந்துள்ளார். அப்போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Categories

Tech |